வைசாகன் | |
---|---|
இயற்பெயர் | വൈശാഖൻ |
பிறப்பு | எம். கே. கோபிநாதன் நாயர் 27 ஜூன் 1940 மூவாற்றுப்புழை, இந்தியா |
மொழி | மலையாளம் |
கல்வி நிலையம் |
|
வகை | சிறுகதை, திரைக்கதை |
எம்.கே.கோபிநாதன் நாயர் எனப்படும் இவர், பிரபலமாக வைசாகன் (Vaisakhan) என்று அழைக்கப்படுகிறார். இவர், ஒரு இந்திய சிறுகதை எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். மேலும், 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்ட விபரத்தின் படி, இவர் கேரள சாகித்ய அகாடமியின் தலைவர் பொறுப்பில் இருந்தார் என்று அறியப்படுகிறது. [1] இவரது கதைகள் நடையில் எளிமை மற்றும் கருப்பொருளில் புத்துணர்ச்சி ஆகியவற்றால் அறியப்படுகின்றன. இவரது பல கதைகள் இந்திய ரயில்வேயை பின்னணியாகக் கொண்டுள்ளன.
வைசாகன் 1940 இல், கேரள மாநிலத்திலுள்ள மூவாற்றுப்புழையில், கோபிநாதனாக ஏ.வி.கிருஷ்ண குருப் மற்றும் நாராயணி அம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[2] இவர்,எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி, நிர்மலா கல்லூரி மற்றும் செயின்ட் ஆல்பர்ட் கல்லூரியில் கல்வி பயின்றார். [3]
1964 இல், இவர் தென்னக இரயில்வேயில் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 20 வருட சேவைக்குப் பிறகு, வைசாகன் முழுநேர எழுத்துத் தொழிலைத் தொடர்வதற்காக விருப்ப ஓய்வு பெற்றார். [2]
இவரது மனைவியின் பெயர் பத்மா. இவர்களுக்கு பிரவீன், பிரதீப், பூர்ணிமா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். 1998இல் இவரது மனைவி காலமானார். தற்போது, இவர், திருச்சூர் மாவட்டத்திலுள்ள பரவட்டானியில் வசித்து வருகிறார்.
வைசாகனின் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு நூல்பலம் கடக்குன்னவர் ஆகும். இது, பல விருதுகளையும் விமர்சனப் பாராட்டையும் பெற்ற கதையாக உள்ளது. இவரது வெளியிடப்பட்ட பிற புத்தகங்கள் பின்வருமாறு: [4]