ஷோபா குருது (1925-2004) மென்மையான இந்துஸ்தானி இசை பாணியில் ஓர் இந்திய பாடகர். தூய பாரம்பரிய இசை பாணியில் திறமை இருந்தபோதிலும், இலகுவான பாரம்பரிய இசையால் தான் இவர் புகழ் பெற்றார். காலப்போக்கில் தும்ரி ராணி என்றும், அவரது குரல் வளத்திற்காக 'அபினயா ஆங்' என்றும் அறியப்பட்டார்.[1][2]
1925 ஆம் ஆண்டில் பெல்காமில் (தற்போதைய கருநாடகம் ) பானுமதி ஷிரோட்கர் பிறந்தார். அங்கு அவர் முதன்முதலில் தொழில்முறை நடனக் கலைஞரான அவரது தாயார் மெனகாபாய் ஷிரோட்கர் மற்றும் ஜெய்ப்பூர்-அடரெளலி கரானாவின் உஸ்தாத் அல்லாடியா கானின் 'கயாகி' சீடரால் பயிற்சி பெற்றார்.[3]
இவர் இளைய பெண்ணாக இருந்த போது, அவரது தாயாரிடம் இசை கற்றுக் கொண்டிருந்தவர், முறையான இசை பயிற்சியை கோலாப்பூரில் உள்ள ஜெய்ப்பூர்-அட்ரெளலி கரானாவின் நிறுவனர் உஸ்தாத் அல்லாடியா கானின் இளைய மகன் 'உஸ்தாத் புர்ஜி கான்' மூலம் தொடங்கினார். இவருடைய திறமையைப் பார்த்து, உஸ்தாத் புர்ஜி கானின் குடும்பத்தினர் விரும்பினர். இவர் அவர்களுடன் நீண்ட நேரம் செலவிட ஆரம்பித்தார். ஜெய்ப்பூர்- அட்ரெளலி கரானாவுடனான இவரது உறவுகள் இன்னும் வலுவாக இருந்தன.[4][5]
தும்ரி, தாத்ரா, கஜ்ரி, ஹோரி போன்ற பகுதி பாரம்பரிய இசை வடிவங்களில் நிபுணத்துவம் பெற்ற ஷோபா குருது, தனது பாடலில் தூய்மையான பாரம்பரிய இசை பத்திகளை சிரமமின்றி சேர்ப்பது, இதனால் ஒரு புதிய இசை வடிவத்தை உருவாக்கி, தும்ரி போன்ற வடிவங்களின் மந்திரத்தை புதுப்பித்துக்கொண்டது ஆகியவற்றால் இவர் ஒரு சிறந்த பிரதிநிதி ஆனார். இவர் குறிப்பாக பாடகர் பேகம் அக்தர் மற்றும் உஸ்தாத் படே குலாம் அலிகான் ஆகியோரின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார்.[6]
மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களிலும் இசை அமைத்துள்ளார்.[7] ஒரு பின்னணி பாடகியாக, அவர் முதலில் கமல் அம்ரோஹியின் திரைப்படமான பக்கீசா (1972), அதனைத் தொடர்ந்து பாகன் (1973) ஆகியவற்றில் பணியாற்றினார். அதில் அவர் 'பெடார்டி பான் கெய் கோய் ஜாவோ மனாவோ மோர் சய்யான்' என்ற பாடலைப் பாடினார். மெயின் துளசி தேரே ஆங்கன் கி (1978) என்ற வெற்றி படத்திலிருந்து "சய்யான் ரூத் கயே" என்ற பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகியாக பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரையை செய்யப்பெற்றார்.[8] மராத்தி திரையுலகில், சாம்னா, லால் மாட்டி போன்ற திரைப்படங்களில் பாடியுள்ளார். 1979 ஆம் ஆண்டில், தி கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா (ஈஎம்ஐ) இவரது முதல் ஆல்பமான அட் ஹெர் பெஸ்ட்டை வெளியிட்டது. 19 ஆம் நூற்றாண்டில் வேரூன்றிய கிழக்கு உத்தரபிரதேச (புர்பி கயாகி) இசை பாரம்பரியத்தில் தனது திகைப்பூட்டும் குரல் படைப்புகளைக் காண்பிக்கும் ஒரு உயர் தரமான பதிவாக கருதப்பட்டவர் ஷோபா குருது.
1987 ஆம் ஆண்டில், அவர் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார், பின்னர் லதா மங்கேஷ்கர் புராஸ்கர், ஷாஹு மகாராஜ் புராஸ்கர் மற்றும் மகாராஷ்டிர கவுரவ் புராஸ்கர் ஆகிய விருதுகளைப் பெற்றார். 2002 ஆம் ஆண்டில், அவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது .
இந்துஸ்தானி இசை வகைகளை ஐந்து தசாப்தங்களாக ஆட்சி செய்த பின்னர், தும்ரி ராணியான ஷோபா குருது 27 செப்டம்பர் 2004 அன்று இறந்தார்.
அவர் விஸ்வநாத் குருதுவை மணந்து ஷோபா குருது என்ற பெயரைப் பெற்றார். அறிஞரும், சித்தார் வாசிப்பாளரான இவரது மாமியார், 'பண்டிட் நாராயண் நாத் குருது', பெல்காம் காவல்துறையில் உயர் பதவியில் இருந்தவர்.[3]
இவரது மகன் திரிலோக் குருது ஒரு புகழ்பெற்ற தாளவாதி.[9] இவரது மற்றொரு மகன் நரேந்திரர் ஆவார்.
இவரது மூன்றாவது மற்றும் மூத்த மகன் ரவி குருது ஒரு ரிதம் வாசிப்பாளர் ஆவார்.
{{cite web}}
: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help)