ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் | |
---|---|
![]() | |
முன்னையவர் | ஜெயச்சாமராஜா உடையார் |
பின்னையவர் | காந்தராஜ அரஸ் |
பிறப்பு | மைசூர், இந்தியா | 20 பெப்ரவரி 1953
இறப்பு | 10 திசம்பர் 2013 பெங்களூரு, கர்நாடகம், இந்தியா | (அகவை 60)
துணைவர் | பிரமோத தேவி |
மரபு | உடையார் |
தந்தை | ஜெயச்சாமராஜா உடையார் |
தாய் | திரிபுர சுந்தரி அம்மணி |
மதம் | இந்து சமயம் |
கையொப்பம் | ![]() |
ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் (Srikantadatta Narasimharaja Wadiyar) (பெப்ரவரி 20 1953 – டிசம்பர் 10 2013) இவர் மைசூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தெடுக்கப்பட்டார்.[1][2]
இவர் மைசூர் சமஸ்தானத்தின் 26 வது மற்றும் கடைசி அரசரான ஜெயச்சாமராஜா உடையாரின் மகன் ஆவார்.[3][4][5] இவரது தந்தையை அடுத்து 1974 ஆம் ஆண்டு இவர் மைசூர் மன்னராக பொறுப்பேற்றார். எனினும் அந்தப் பதவி சம்பிரதாய பூர்வமானதாகவே இருந்தது. நவராத்திரி விழாவில் இவரது பங்கு முன்னிலைப் படுத்தப்பட்டது
டிசம்பர் 10 2013 அன்று பெங்களூரு அரண்மனையில் மாரடைப்பால் காலமானார். டிசம்பர் 11 2013 அன்று அவரது உடல் தங்க அம்பாரியில் நஞ்சன்கூடு கொண்டு செல்லப்பட்டு மனுவனத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[6]