கே. சண்முகம் K. Shanmugam | |
---|---|
![]() 2013 இல் கா. சண்முகம் | |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 அக்டோபர் 2015 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | தியோ சீ இயான் |
தொகுதி | நீ சூன் |
பதவியில் 1 நவம்பர் 2010 – 20 மே 2011 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | வொங் கான் செங் |
பின்னவர் | தியோ சீ இயான் |
சட்ட அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 மே 2008 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | சண்முகம் ஜெயக்குமார் |
தொகுதி | நீ சூன் |
சிங்கப்பூர் நாடாளுமன்றம் நீ சூன் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 மே 2011 | |
பெரும்பான்மை | 33,149 (23.80%) |
வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 21 மே 2011 – 30 செப்டம்பர் 2015 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | சியார்ச் யோ |
பின்னவர் | விவியன் பாலகிருஷ்ணன் |
சிங்கப்பூர் நாடாளுமன்றம் செம்பாவாங் | |
பதவியில் 3 செப்டம்பர் 1988 – 18 ஏப்ரல் 2011 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காசிவிசுவநாதன் சண்முகம் 26 மார்ச்சு 1959 சிங்கப்பூர் |
அரசியல் கட்சி | மக்கள் செயல் கட்சி |
துணைவர்(கள்) | சீதா சுப்பையா (தி. 2008), ஜோதி ராஜா (மணமுறிவு) |
பிள்ளைகள் | 2 (ஜோதி ராஜாவுடன்)[1] |
முன்னாள் மாணவர் | சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் |
காசிவிசுவநாதன் சண்முகம் (Kasiviswanathan Shanmugam, பிறப்பு: 29 மார்ச் 1959), என்பவர் சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார். மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தியத் தமிழரான சண்முகம் 1972 முதல் 1977 வரை ரஃபில்ஸ் கல்விக்கழகத்தில் கல்வி பயின்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி பயின்று 1984 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றர். 1985 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வழக்குரைஞர்கள் அமைப்பில் (Bar) சேர்த்துக்கொள்ளப்பட்டார். பின்னர் அவர் அலென் அண்ட் கிளெண்டில் என்ற சிங்கப்பூரின் தனியார் சட்ட நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார்.
1988 ஆம் ஆண்டில் சண்முகம் செம்பாவாங் குழுத்தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். நாடாளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினராக இருந்து கொண்டு தொடர்ந்து தனது வழக்கறிஞர் தொழிலையும் செய்து வந்தார். 2008 ஆம் ஆண்டில் சட்ட அமைச்சராக பேராசிரியர் எஸ். ஜெயக்குமாரின் இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்[2]. 2010 ஆம் ஆண்டில் இவர் உட்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.