'மியூசிக் அகாதெமி' என்றழைக்கப்படும் கலை மன்றம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இராயப்பேட்டை பகுதியில் உள்ளது . இக்கலை மன்றம், சங்கீத வித்வத் சபை என்றும் அழைக்கப்படுகிறது.
கருநாடக இசையின் நலம் விரும்பிகள் மற்றும் இசை விரும்பிகள், அப்போதைய மெட்ராஸ் நகரத்தில் ஒரு கலை மன்றத்தை நிறுவ விரும்பினர். அகில இந்திய இசை மாநாடு 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்தபோது, இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய இசையை வளர்க்கும் முகமாகவும், இசையைப் பற்றி தத்துவம் மற்றும் பயிற்சி ரீதியாக கற்றுத்தரும் வகையிலும் இக்கலை மன்றம் இருக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். இந்த மாநாட்டுக்கென அமைக்கப்பட்ட வரவேற்பு குழு, 1928 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று தற்காலிகமானதொரு செயற்குழுவை தேர்ந்தெடுத்தது. கலை மன்றத்தை நிறுவும் பொறுப்பு அச்செயற்குழுவிடம் தரப்பட்டது.
1928 ஆம் ஆண்டில், இக்கலை மன்றத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனையை தரும் வகையில் 'வல்லுநர் குழு' ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:
1928 ஆம் ஆண்டு; ஆகஸ்ட் 18 அன்று இக்கலை மன்றம், பொது நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.