வேலுப்பிள்ளை அகிலேசபிள்ளை | |
---|---|
பிறப்பு | திருகோணமலை, இலங்கை | 7 மார்ச்சு 1853
இறப்பு | சனவரி 1, 1910 | (அகவை 56)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | பதிப்பாளர், உரையாசிரியர், புலவர் |
பெற்றோர் | வேலுப்பிள்ளை |
பிள்ளைகள் | இராசக்கோன், அழகக்கோன் |
வே. அகிலேசபிள்ளை (V. Akilesapillai, 7 மார்ச்சு 1853 – 1 சனவரி 1910), தமிழறிஞரும், ஈழத்துப் புலவர்களில் ஒருவர். பல சிற்றிலக்கியங்களைப் பாடியும் பதிப்பித்தவருமாவார்.
இவர் திருகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர். குமாரவேலுப்பிள்ளை, சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளை முதலானோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேறியவர். பயிற்றப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர். இராசக்கோன், அழகக்கோன் என்பார் இவரது புதல்வர்கள்.